Saturday, October 19, 2024

தப்லீக் ஜமாத்

தப்லீக் ஜமாத் என்பது தில்லி மேவாத்தில் முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட உருவாக்கப்பட்ட ஓர் இயக்கமாகும். நல்ல நோக்கில்தான் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது என்பதை அதன் வரலாறு சுட்டி நிற்கிறது.


19ம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில்  பெயரளவில் மாத்திரம் முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டு, அல்லாஹ்வை மறந்து வாழ்ந்த மக்களையும், சமாதி வழிபாடுகளிலும் தனிநபர் வழிபாடுகளிலும் மூழ்கிக்கிடந்த மக்களையும், இஸ்லாமியக் கடமைகள் பற்றி அறியாமல், அவற்றை அலட்சியப்படுத்தி வாழ்ந்த மக்களையும் கண்டு அல்லாமா இல்யாஸ் (ரஹ்) அவர்கள் கவலைப்பட்டு, துவக்கிய இயக்கமே தப்லீக் இயக்கமாகும்.


அல்லாமா இல்யாஸ் (ரஹ்) அவர்களால் டில்லி – மேவாத்தில் தப்லீக் இயக்கம் உருப்பெற்ற பிறகு, சமாதிகளில் மண்டியிட்டவர்கள் பள்ளிப் பக்கம் விரயலானார்கள். பூட்டிக்கிடந்த இறையில்லங்கள் தொழுகையாளிகளால் நிரப்பப்பட்டன. மார்க்க ஈடுபாடும் நபி (ஸல்) அவர்கள் பற்றிய மதிப்பு மக்களின் உள்ளங்களில் அதிகமாகியது.


இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்கள் தங்களின் பொருளையும், உழைப்பையும் தியாகம் செய்கின்ற நிலை ஏற்பட்டது. 7 வருடங்கள் மதரசாவில் கற்றுப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மார்க்கத்தைச் சொல்லத்  தகுதிபெற்றவர்கள் என்ற நிலை, இந்த ஜமாத்தின் எழுச்சியினால் ஓரளவாவது மாறியது. இதுவெல்லாம் இந்த இயக்கத்தினால் சமுதாயத்திற்கு கிடைத்த நற்பயன்கள்.


அல்லாமா இல்யாஸ் (ரஹ்) மற்றும்அவர்களின் புதல்வர் யூசுப் ஆகியோரின் மறைவிற்குப்பிறகு இந்த இயக்கத்தின் அறிஞர்கள் தப்லீகின் உயர் நோக்கத்திலிருந்து அதைத் திசை திருப்பும் பணியில் ஈடுபடலானார்கள் என்ற விமர்சனம் உள்ளது.


மனிதர்களுக்கும், பெரியார்களுக்கும் அளவு கடந்த மரியாதை செய்யும் அளவுக்கு மக்களின் மூளைகளை சலவை செய்யலானார்கள். மீண்டும் சமாதிவழிபாட்டுக்கும் தனிமனித வழிபாட்டுக்கும் மக்களை இழுத்துச் செல்லும் முயற்சிகள்  நடைபெற்றதாக அதன் வரலாற்றில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.


இந்தப்பணியைச் செய்தவர்களில் முதலிடத்திலிருப்பவர் உ.பி. மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த ஸகரிய்யா சாஹிப் என்பவர் ஆவார். இவர் தனக்கும் அப்போதைய ஹஜ்ரத்ஜீக்கும் மத்தியில் நிலவிய மாமன் மருமகன் என்ற உறவைப் பயன்படுத்தி தான் எழுதிய நூல்களை தப்லீகின் தஃலீம்களில் படிக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார்.


மக்களை மார்க்கத்தின் அடிப்படையில் அழைத்திட தோற்றுவிக்கப்பட்ட இந்த இயக்கத்தில் ஸகரிய்யா சாஹிப் எழுதிய கற்பனைகளும், கதைகளும் படிக்கப்படும் நிலை ஏற்பட்டுவிட்டது. அல்குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற இவரது தஃலீம் தொகுப்பு, தப்லீக் ஜமாத்தினருக்குக் கிடைத்த புதிய வேதமாக ஆகிவிட்டது. இஸ்லாம் அனுமதிக்காத கற்பனைகளை மார்க்கமாக நம்புவது இவர்களின் வழக்கமாகிவிட்டது. 


அதேபோல், தனிமனித வழிபாட்டை இவர்களிடம் அதிகமாகக் காண முடியும். அமீர் ஸாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முஸாபஹா செய்யும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அமீர், இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முஸாபஹா  செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முஸாபஹா செய்கின்றனர். இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது.


பெரியார் கதைகள் என்று இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது, மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக, பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தக் கப்ஸாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இவற்றைச் சிந்தித்துப் பார்த்தால், இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான விஷயங்களும் இருப்பதைக் காணலாம்.


முழு மனித குலத்துக்கும் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் நபியின் ஹதீஸ்களிலும் ஏராளமாக இருக்கிறது. இஸ்லாத்தின் உபதேசங்கள், கொள்கை கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் ஆகிய அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன. ஆனால், பொய்யான தகவல்களை மக்கள் மன்றில் முன்வைக்கும் போது, மக்கள் அறியாமையில் மூழ்கி மார்க்க விரோத விடயங்களில் ஈடுபாடு கொண்டுவிடுகின்றனர்.


தஃலீம் தொகுப்பில் ஸகரியா சாகிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன்பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சிந்தனையை, கதைகளை சேர்த்து இருக்கிறார் . ஆனால், ஹஸ்ரத் ஜி யின் சம்பவங்கள் ஆயிரம் என்ற நூலில் அதன் ஆசிரியர் எஸ்.எஸ்.மவ்லானா என்பவர் அத்தனையையும் முழுக் கற்பனையிலேயே தொகுத்துள்ளார். ஒரு குர்ஆனிய வசனமோ ஒரு ஹதீஸோ அவருடைய நூலில் இடம்பெறவில்லை.


எனினும், தப்லீக் ஜமாத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் போன்று, ஹஸ்ரத் ஜி யின் சம்பவங்கள் ஆயிரம் என்ற நூலிலும் உள்ளன. எனவே, அவற்றை அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.


அந்த நூலில் நபி (ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம்) அவர்களின் பஷாரத், கனவிலும் ஹஜ்ரத் ஜீ (ரஹ்), துஆவில் திருந்திய வாலிபன் என்றெல்லாம் பலவேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இந்த நூலில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.

தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள் என்றால் என்ன ?

 தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள் என்றால் என்ன ?


தப்லீக் ஜமாஅதை ஆரம்பித்தவர்கள் சூஃபித்துவ கொள்கையை சார்ந்தவர்கள். அதன் தாக்கத்தின் காரணாமாக மார்க்கத்தில் இல்லாத பித்அதுகளை செய்பவர்களாகவும், நல்லோர்கள் விஷயத்தில் இல்லாத கற்பனை கதைகளை உருவாக்கி பரப்புவர்களாகவும் இருக்கிறார்கள்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தில் ‘தரீக்காக்கள், சூஃபித்துவம், சூஃபிகள்’ போன்ற சொற்கள் அனைவருக்கும் மத்தியில் பிரபல்யமானாதாகும். ஆனால் இதன் கருத்தோட்டம் எவ்வாறு இவர்கள் மத்தியில் புரிந்து வைக்கப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கும் போதே ஆச்சரியம் கலந்த வேதனையை அளிக்கின்றது.

சாதாரண முஸ்லிம் சமூகத்தினர் ஆலிம்கள் முதற்கொண்டு பாமரர் வரைக்கும், ‘சூஃபிகள் எனப்படுவோர் இறைநேசச் செல்வர்கள். தொழுகை, நோன்பு, திக்ர், போன்ற இன்ன பல வணக்கங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள்., இதனால் சாதாரண மக்களை விட ஒருபடி மேலேசென்று அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றவர்கள் என்றும், முழுக்க முழுக்க இஸ்லாமிய மார்கத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் இவர்கள்தான்’ என்பது போன்ற ஒரு போலியான கருத்துக் கண்ணோட்டமும் அதிகப்படியான முஸ்லிம் மக்களின் உள்ளங்களில் புரையோடிப் போயிருப்பதை வருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது. 

எனவே சூஃபித்துவம் என்றால் என்ன? இது எங்கிருந்து தோற்றம் பெற்றது? இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதுபற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு இது எந்தளவு முரண்பட்டு நிற்கின்றது போன்ற விடயங்களைச் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்...

Friday, October 18, 2024

ஷைத்தான் நமக்கு பகிரங்கமான எதிரியாவான்

 மனிதர்களாகிய நாம் நம்மை படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். இல்லை என்றால் நாம் நமது மனோ இச்சைக்கு கட்டுப் பட்டு வாழ்கிறோம் அல்லது பிறரின் மனோ இச்சைக்கு கட்டுப் பட்டு வாழ்கிறோம் அல்லது ஷைத்தானுக்கு கட்டுப் பட்டு வாழ்கிறோம் என்று அர்த்தம்.


ஷைத்தான் நமக்கு பகிரங்கமான எதிரியாவான். எதிரியின் ஆசைக்கு நாம் இணங்கிவிடக்கூடாது. ஷைத்தானை எதிரியாக நினைத்து அவனுக்கு எதிராக செயல்பட வேண்டும்.


35:3. மனிதர்களே! “உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையை நினைத்துப்பாருங்கள், வானத்திலிருந்தும்; பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வையன்றி வேறொரு படைக்கிறவன் இருக்கிறானா? அவனைத் தவிர வேறொரு(வணக்கத்திற்குரிய) நாயன் இல்லை, ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?



35:5. மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதாகும், ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களைத்திட்டமாக ஏமாற்றி விட வேண்டாம், (ஷைத்தானாகிய) ஏமாற்றுகிறவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களைத் திட்டமாக (மோசடியில் ஆக்கி) ஏமாற்றிவிட வேண்டாம்.


35:6. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு விரோதியாக இருக்கின்றான், ஆகவே, அவனை நீங்களும் விரோதியாகவே எடுத்துக் கொள்ளுங்கள், அவன் (தனக்கு வழிபட்ட) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் நரகவாசிகளில் ஆகிவிடுவதற்காகவேதான்.



ஷைத்தான் மனித சமூகத்தை நேர்வழியை விட்டும் திசை திருப்பி நரகத்தில் வீழ்த்துவதற்காக இரண்டு விதமான யுக்திகளைக் கையாள்வான். 


ஒன்று: இஸ்லாமியக் கோட்பாடுகள் சட்ட திட்டங்களைக் கடைப்பிடிப்பதில் வெறுப்பை ஏற்படுத்தி அதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் தூரமாக்கி பாவச் செயல்களில் ஈடுபடச் செய்து வழிகெடுத்து விடுவான். 


இரண்டு: கொஞ்சம் இறை பக்தி ஆத்மீகப் பற்று, வணக்க வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவேரை வழிகெடுப்பதற்கு மற்றொரு வழிமுறையைக் கடைப்பிடிப்பான். அதாவது அவர்களின் மார்க்க அறிவின்மையைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இல்லாத, இஸ்லாம் தடுத்த விஷயங்களை – அவைதான் இஸ்லாமிய மார்க்க வழிபாடுகள் என நம்ப வைத்து அதன் வழியில் நடக்க வைத்து வழிகெடுத்து விடுவான்.

Wednesday, October 16, 2024

இறைத்தூதர் ﷺ அவர்களை பின்பற்றுவதில் பேணப்பட வேண்டிய ஆறு விதிகள்

 இறைத்தூதர் ﷺ அவர்களை பின்பற்றுவதில் பேணப்பட வேண்டிய ஆறு விதிகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொதுவாக இன்று இறைத்தூதர் ﷺ அவர்களை பின்பற்றுவதில் நமது சமூகம் இரண்டு விதமான வழிமுறைகளை கையாளுகின்றன.


முதலாவது நபியவர்கள் மீது கொண்ட நேசத்தை மார்க்கம் கூறிய வரையறையில் செய்பவர்கள். 


இரண்டாவது நபி அவர்களை நேசிக்கும் விடயத்தில் எந்த வரையறையும் இல்லை, மனம் தோன்றிய அடிப்படையில் நேசித்துக் கொள்ளலாம் அது மார்க்கத்திற்கு முரணாக இருந்தாலும் சரி. 


முதலாவது வகையினர் மார்க்கத்திற்கோ சமூகத்திற்கோ அச்சுறுத்தலாக இருப்பதில்லை. 


ஆனால் இரண்டாவது வகையினர் மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படுபவர்கள். 


அஷ்ஷேக் வலீத் அஸ்ஸயீதான் ஹஃபிழஹுல்லாஹ் நபியவர்களை பின்பற்றும் விடயத்தில் பேண வேண்டிய ஆறு அடிப்படை விதிகள் என்று நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார்கள் .


பொதுவாக வணக்க வழிபாடுகளில் மார்க்கம் விதித்திருக்கும் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் பின்வரும் விதிகள் கவனிக்கத்தக்க ஒன்று. 


"வணக்க வழிபாடுகளின் அடிப்படை தடையாகும் / நிறுத்தி வைத்தலாகும்"


الأصل في العبادة المنع / التوقيف 


 திருக்குர்ஆனில் இருந்து ஆதாரம் 


اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّيْنِ مَا لَمْ يَاْذَنْ بِهِ اللّٰهُ‌ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِىَ بَيْنَهُمْ‌ وَاِنَّ الظّٰلِمِيْنَ لَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏

அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் : 42:21)


"மார்க்கம் எதை தடை செய்திருக்கிறதோ அதை தவிர பழக்கவழக்கங்களின் அடிப்படைவிதி மன்னிப்பாகும்"


الأصل في العادات العفو فلا يحظر منها إلا ما حرمه الله


قُلْ اَرَءَيْتُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ لَـكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا قُلْ آٰللّٰهُ اَذِنَ لَـكُمْ‌ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ‏

(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்களுக்காக அல்லாஹ் இறக்கி வைத்த உணவுகள் - அவற்றில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே அதைப்பற்றி கூறுங்கள்!'' (‘‘இப்படி உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?'' என்று (அவர்களைக்) கேட்பீராக!

(அல்குர்ஆன் : 10:59)


ஆக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றுவதில் கீழ்க்காணும் ஆறு விதிகளை நாம் கடைபிடிக்கும் பொழுது மார்க்கத்தில் அனாச்சாரங்களை / பித்அதுகளை அத்துமீறல்களை தவிர்த்துக் கொள்ள முடியும்


💥முதலாம் விதி : (جنس العبادة -வணக்க வழிபாடு தொடர்பான விடயமாக இருக்க வேண்டும்) 


நாம் நபி அவர்களை பின்பற்றும் விடயங்கள் வணக்க வழிபாடுகளாக அதற்கு தொடர்பான விடயங்களாக இருக்க வேண்டும்.


இந்த விதியை கவனிக்கும் பொழுது நபி அவர்கள் மீது புகழ் பாடுகிறோம் என்ற பெயரில் சமூகத்தில் நிகழ்த்தப்படும் மீலாது மௌலிது போன்ற அனாச்சாரங்கள் நீக்கப்படும். 


காரணம் இந்த நிகழ்வுகள் வணக்க வழிபாடுகளாக கருதப்படுகின்றன. இந்த வகையான வணக்க வழிபாடுகள் அல்லாஹ்வின் தூதரோ நபித்தோழர்களோ சங்கையான நான்கு மத்ஹபுகளின் இமாம்களோ கூறாத ஒன்று.


வணக்க வழிபாடுகள் என்பது அல்லாஹ்வும் தூதரும் நமக்கு கற்றுக் கொடுத்த விடையங்களாக மட்டுமே இருக்க முடியும்.


مَاۤ اَفَآءَ اللّٰهُ عَلٰى رَسُوْلِهٖ مِنْ اَهْلِ الْقُرٰى فَلِلّٰهِ وَلِلرَّسُوْلِ وَلِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِۙ كَىْ لَا يَكُوْنَ دُوْلَةً بَيْنَ الْاَغْنِيَآءِ مِنْكُمْ‌ وَمَاۤ اٰتٰٮكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَ مَا نَهٰٮكُمْ عَنْهُ فَانْتَهُوْا‌ وَاتَّقُوا اللّٰهَ ‌ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَابِ‌ۘ‏

 நம் தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (இவ்விஷயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவனாவான்.

(அல்குர்ஆன் : 59:7)


ஆக இறைத்தூதர் ﷺ அவர்கள் எதை ஏவி இருக்கிறார்களோ அதை செய்வதும் எதை தடுத்திருக்கிறார்கள் அதை விட்டு விலகி இருப்பதும் மட்டுமே இஸ்லாத்தில் வணக்க வழிபாடாக கருதப்படுகிறது. 


💥இரண்டாம் விதி :(سبب العبادة- வணக்க வழிபாட்டின் காரணம்) 


ஒரு வணக்க வழிபாட்டை செய்வதற்கு மார்க்கம் காட்டித் தந்த காரணம் ஒன்றே அனுமதியை தரும். 


எனவே மனம் தோன்றலில் நாம் மார்க்கமாக வணக்கமாக பார்க்கும் விடயங்களை மார்க்கப் பெயரில் அரங்கேற்றுவது அனாச்சாரமாகும்.


மார்க்கம் சொல்லித் தராத ஐந்து நேர தொழுகைக்கு பின் ஓதப் படும் கூட்டு துஆக்கள், கூட்டாக அமர்ந்து சப்தத்துடன் திக்ரு செய்தல், சில சந்தர்ப்பங்களில் ஆடுதல், இசையுடன் பாடுதல்,இறைநேசர்களுக்கு மதிப்பளிக்கிறோம் அவர்களை நேசிக்கிறோம் என்ற காரணத்தை முன்வைத்து கந்தூரி, சந்தனக்கூடு தூக்குதல் கொடியேற்றுதல், ஆண்களும் பெண்களும் தர்காவில் ஒன்று கூடுதல், மண்ணரைகளுக்கு சஜ்தா செய்தல், முத்தமிடுதல் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வைத்தல்,

இன்னும் பல ஷிர்க்கான மார்க்கத்திற்கு புறம்பான விடயங்களும் இதில் வந்து சேரும்.


اِنَّاۤ اَنْزَلْنَا التَّوْرٰٮةَ فِيْهَا هُدًى وَّنُوْرٌ‌ يَحْكُمُ بِهَا النَّبِيُّوْنَ الَّذِيْنَ اَسْلَمُوْا لِلَّذِيْنَ هَادُوْا وَ الرَّبَّانِيُّوْنَ وَالْاَحْبَارُ بِمَا اسْتُحْفِظُوْا مِنْ كِتٰبِ اللّٰهِ وَكَانُوْا عَلَيْهِ شُهَدَآءَ‌‌ فَلَا تَخْشَوُا النَّاسَ وَاخْشَوْنِ وَلَا تَشْتَرُوْا بِاٰيٰتِىْ ثَمَنًا قَلِيْلًا‌ وَمَنْ لَّمْ يَحْكُمْ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْكٰفِرُوْنَ‏

எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்தவற்றைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக நிராகரிப்பவர்களே!

(அல்குர்ஆன் : 5:44)


💥மூன்றாம் விதி - (صفة العبادة -வணக்க வழிபாட்டின் முறை) 


நாம் செய்யும் வழிபாடுகள் இறைத்தூதர் ﷺ அவர்கள் கற்றுத் தந்த விதத்தில் அந்த அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். 


உதாரணமாக ஐந்து நேரத் தொழுகையில் நான்கு ரக்காத்துகள் தொழகும் தொழுகையில் ஒரு இரகத்தை கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது.


எந்த முறையில் நமக்கு தொழுது காட்டினார்களோ அந்த அடிப்படையில் தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டும். 


சில விசேஷமான தொழுகைகள் என்ற பெயரில் ரஜப் மாதத்திலும் ,ஷஃபான் மாதத்திலும் இரவு விழித்து வணங்குவது ஜமாத்தாக தொழுவது புத்தாடைகளை உடுத்திக்கொண்டு ஈதுகளை போல் அந்த நாட்களை கொண்டாடுவது போன்ற அனாச்சாரங்கள் இதில் அடங்கும்.


💥 நான்காம் விதி - (زمان العبادة -வணக்க வழிபாட்டின் காலம்) 


வணக்க வழிபாடுகளாக இருக்கும் பட்சத்தில் அதற்குரிய கால அளவை இஸ்லாம் நிர்ணயித்திருக்கிறது, ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்துவிட்டால் நபிகளார் மீது புகழ் பாடுவது என்ற அடிப்படையில் மௌலிதும், மீழாது விழாக்களும் அந்நிய சமூகத்தினருக்கு நிகராகவே கொண்டாடப்படுகிறது, 


முஹர்ரம் மாதம் வந்துவிட்டால் ஷீஆக்களின் அனாச்சாரங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளாக பொதுமக்களிடத்தில் அறிமுகம் செய்து மார்க்கத்தில் இல்லாத எல்லா பித்ஆகளையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்கிறார்கள்.


💥 ஐந்தாம் விதி - (مكان العبادة -வணக்க வழிபாட்டின் இடம்) 


அல்லாஹ்வின் இல்லங்களில் துணை நிகழ்த்தப்பட வேண்டிய இபாதாதுக்களை, தர்காக்களிலும் மரணித்த சாலிஹீன்களின் மன்னரைகளிலும் அரங்கேற்றுகின்றனர். 


அல்லாஹ்விற்காக அறுக்கப்பட வேண்டிய குர்பானிகளை தர்காக்களில் அறுத்து பங்கிடுகின்றனர். 


💥 ஆறாம் விதி - (مقدار العبادة -வணக்க வழிபாட்டின் அளவு) 


மார்க்கம் விதித்திருக்கும் அடிப்படையில் நாம் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும், கூட்டவும் முடியாது குறைக்கவும் முடியாது. 


இரவு முழுவதும் தாங்கள் கற்பனையாக மார்க்கமாக நினைத்துக் கொண்டிருக்கும் சில விசேஷமான நாட்களில் நபி அவர்கள் மீது ஸலவாத்து சொல்கிறோம் என்ற பெயரில் விடிய விடிய விடி மௌலிது ஓதி காலையில் பஃஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு தூங்குவது போன்ற அனாச்சாரங்கள் நிறையவே நமது சமூகத்தில் பார்க்க முடிகிறது.


மேலே கூறியிருக்கும் இந்த ஆறு விதிகளை ேணும்பொழுது நபி அவர்களின் ஸூன்னாக்களை முறையாக பித்ஆக்கள் இன்றி பின்பற்ற முடியும்.


-தமிழில் 

உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி