Monday, December 2, 2024

இஸ்லாத்தில் பெயர் வைக்கும் போது கவனிக்க வேண்டியவைகள்

 


💕
இஸ்லாத்தில் பெயர் வைக்கும் போது கவனிக்க வேண்டியவைகள் :🛐
💝 இன்று இரண்டு நோக்கத்தில் பெயர் வைக்கிறார்கள் :
- ஒன்று அழகாகவும் அர்த்தமாகவும் இருக்க வேண்டும்!
- யாரும் இந்த பெயரை வைத்து இருக்க கூடாது! Style ஆகவும் இருக்க வேண்டும்!!! என்று எண்ணி பெயரின் பொருள் அறியாமல் வைத்து விடுகிறார்கள்!
💟 பெயர் என்பது ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்! பெயர் சரி இல்லையென்றால் அவன் வாழ்வில் பெரிய சோதனைகளை சந்திப்பான்!
🖤 இன்னும் சிலர் பெயரை Google போன்ற வற்றில் தேடி வைக்கிறார்கள்! இதை பயன் படுத்தி யூதர்கள் முஸ்லீம் பெயர் போன்று அர்த்தம் இல்லாத அவர்கள் மதம் சார்ந்து பெயர்களை Google போன்ற சமூக வலைத்தளங்களில் Muslim என்ற பெயர் website யில் வைக்கிறார்கள்!
- இது முற்றிலும் தவறாகும்!
💟 அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று நம்மில் அதிகமானோருக்கு தன்னுடைய பெயர் அர்த்தம் தெரியாது!?
நம்முடைய பெயருக்கு அர்த்தம் சரியானதா தவறானத என்று எத்தனை பேருக்கு தெரியும்!?
- நாங்கள் பார்த்த வரை சில சகோதர - சகோதரிகளின் பெயர்களின் அர்த்தம் மோசமானதாக இருந்தது!!!
- ஒரு சகோதரியின் பெயரின் அர்த்தம் : சோகம் / இவர்களுக்கு 24 வயது ஆகுகிறது - இவ்வளவு நாட்களும் இதே பெயருடன் இருந்து உள்ளார்கள்!
- ஒரு சகோதரனின் பெயர் அர்த்தம் : அரசருக்கு எல்லாம் அரசன் ( நவதுபில்லாஹ் )
- ஒரு சகோதரியின் பெயர் : விபச்சாரம் செய்யும் இடம்!
- ஒரு சகோதரர் தன்னுடைய பிள்ளைக்கு மலக் என்று பெயர் வைக்க விரும்பினார்! ஆனால் மலக் என்பார்கள் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல! இந்த பெயரை வைக்க கூடாது என்று மார்க்க அறிஞர்கள் கூறி உள்ளார்கள்!
💟 இன்னும் சிலர் பெயர் இவ்வாறு வைக்கிறார்கள் :
- அல்லாஹ் பிச்சை
- நாகூர் பாவா
-பக்கீர் (பிச்சைகாரன் )
-நாகூரா
-ஆத்தங்கரையா
-காட்டுபாவா
இது போன்றப் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்கு வைத்து விடுகிறார்கள்! பள்ளியில் சென்று படிக்கும் போது சக நண்பர்களால் கேலி செய்யப்படுகிறார்கள்!
பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது!
💝 அழகான பெயர்களை வைக்க வேண்டும்!
❤️ நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான்!
( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 147 )
💟 அல்லாஹ்விற்கு விருப்பமான பெயர்கள் :
உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.
( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4320 )
💟 நபிமார்களின் பெயர்களை வைக்கலாம் :
❤️ எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு “இப்ராஹீம்’ எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள்.
(நூல் : முஸ்லிம் : 4342)
❤️ நபி (ஸல்) அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள்.
( நூல் : அஹ்மத் )
💟 பெயரில் இணைவைப்பு இருக்கக்கூடாது 🚫 :
- அல்லாஹ்வுடைய தனி தன்மைகளை குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது!
- ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்)
- ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்)
- ஷாஜஹான் (உலகின் அரசன்)
ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இந்த தன்மை எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது! இது போன்ற பெயர்களை வைக்க கூடாது 🚫
💟 நாம் பெயர் வைக்கும் போது அது ஷிர்க் ஆன வார்த்தைகள் அல்லது மோசமான அர்த்தம் உள்ள பெயராக உள்ளது என்று பார்க்க வேண்டும் :
❤️ மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (6205)
❤️ மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள்.
அவர் நபி (ஸல்) அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள்.
அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள்.
(ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள்.
அவர் ஷ‚ரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்கு ஷ‚ரைஹ் என்று கூறினார்.
அப்படியானால் நீர் அபூ ஷ‏‚ரைஹ் (ஷ‚ரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள்.
( நூல் : நஸயீ )
❤️ அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர்வைத்தார்கள்.
( நூல் : அஹ்மத் )
💟 குறிப்பிட்ட சில பெயர்களை சூட்டக்கூடாது :
சில பெயர்களை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.
❤️ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.
(நூல் : முஸ்லிம் : 4328)
❤️ அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு முஹம்மத் என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்” என்று கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம் : 4324)
👉 நபி (ஸல்) அவர்களின் குறிப்பு பெயரான அபுல்காசிம் என்றப் பெயரை யாரும் சூட்டக் கூடாது!
💟 பெயர் மாற்றம் செய்யலாம் மோசமான அர்த்தங்களைக் கொண்டப் பெயர்களை சூட்டக்கூடாது :
🖤 பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர்களை மாற்றிவிட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைத்து கொள்ள வேண்டும்!
❤️ என் தந்தை (ஹஸ்ணன் இப்னு அபீ வஹ்ப்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்கள் :
- அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் பெயரென்ன?' என்று கேட்டார்கள். அவர்கள், 'ஹஸ்ணன்' (முரடு) என்று கூறினார்!
- நபி(ஸல்) அவர்கள், '(இல்லை) நீங்கள் (இனிமேல்) 'ஸஹ்ல்' (மென்மை)' என்றார்கள்.
- அவர், 'என் தந்தை சூட்டிய பெயரை நான் மாற்றிக் கொள்ளமாட்டேன்' என்றார்.
- அதற்குப் பின்னர் எங்கள் குடும்பத்தாரிடையே (அவர்களின் குண நலன்களில்) முரட்டுத்தனம் நீடித்தது.
( நூல் : ஸஹீஹ் புகாரி : 6190 )
❤️ நபி (ஸல்) அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள்.*l
( நூல் : அபூதாவூத் : 4301)
👉 ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.
👉ஆசியா (آسٍيَة) என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும். இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்கு தடையில்லை!
💟 எப்போது பெயர் வைக்க வேண்டும் :
ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : அஹ்மத்)
- குழந்தை பிறந்து ஏழாவது நாளில் நாம் பெயர் சூட்டலாம்!
💟 ஆலிம்கள் தான் பெயர் வைக்க வேண்டுமா :
- ஆலீம்கள்தான் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும் என்று பலர் கருதுகிறார்கள். பெற்றோர்களே குழந்தைக்கு பெயர்வைக்க அதிக தகுதியானவர்கள்!
- மர்யம் (அலை) அவர்களுக்கு அவர்களின் தாயார் தான் பெயர் வைத்தார்கள்.
- ஆலிம்கள் தான் பெயர்சூட்ட வேண்டும் என்றிருந்தால் மர்யம் (அலை) அவர்களின் தாயார் அன்று பெரும் ஆலிமாகவும் நபியாகவும் விளங்கிய ஸகரிய்யா (அலை) அவர்களிடம் சென்று பெயர்வைக்கச் சொல்லியிருப்பார்கள்!
- ஆனால் அவர்கள் சுயமாகவே தன் விருப்பப்படியே பெயர் வைத்தார்கள்!
- நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைக்கும் பெருமானார் (ஸல்) அவர்கள் பெயரிடவில்லை. சஹாபாக்கள் தாங்களாகவே பெயர் சூட்டினார்கள். நபியவர்கள் இதைத் தடுக்கவில்லை!
❤️ இருந்தாலும் நீங்கள் தேர்வு செய்த பெயரை குழந்தைக்கு வைப்பதற்கு முன் ஆலிம்களிடம் கூறிய இந்த பெயரை வைக்கலாமா? இதனுடைய அர்த்தம் சரியானதா என்று கேட்டு கொள்ளுவது சிறந்தது!

No comments:

Post a Comment