Friday, November 25, 2016

ஆயிஷா (ரலி) அவர்கள் குர்ஆனில் பால்குடி பற்றிய வசனம் எழுதப்படவில்லை என்று கூறினார்களா? நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் குர்ஆனில் வசனம் நீக்கப்பட்டதா ??

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெரும் ஒரு ஹதீஸை பற்றிய விமர்சனமும் விளக்கமும்.

முதலில் இந்த ஹதீஸ் பற்றிய விமர்சன ஆய்விற்கு பின்னணி காரணம் என்ன?

தமிழ் நாட்டில் உள்ள ஒரு முன்னாள் நாத்திகர், அவரின் நாத்திக சிந்தனைக்கு ஒத்துவரவில்லை என்பதால் சூனியம் இல்லை என்றார். இதற்கு பதிலளித்த அறிஞர்கள் சூனியம் உண்டு என்றும் அல்லாஹ் நாடினால் தாக்கம் ஏற்படும்  என்றும்  ஸஹீஹான ஹதீஸிலும் குரானிலும் வந்துள்ளதே என்கிறார்கள். அவர் சூனியம் பற்றிய குரானின் ௨:௧௦௨ என்ற வசனத்தை முதலில் வளைத்தனர், ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு திருத்தும் செய்தார் (அதை பற்றி ஒரு தனி விளக்கத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்). பிறகு குரானிற்கு முரண் படுகிறது என்று கூறி சூனியம் பற்றிய ஹதீஸை மறுத்தார். தனது கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்னும் பல ஹதீஸ்களை மறுத்தார். அவர் முறுத்த ஹதீஸ்கள் முதஷாபிஹ் என்னும் பல கருத்திற்கு இடம்பாடான ஹதீஸ்கள். அது போன்ற ஹதீஸ்களில் ஒன்று தான் நாம் இங்கே பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்.

முதலில் ஹதீஸை பார்ப்போம்.

عن عائشة  أنها قالت: كان فيما أنزل من القرآن (عشر رضعات معلومات يحرّمن ) ثم نسخن بـ(خمس معلومات) فتوفي رسول الله وهن فيما يقرأ من القرآن .

(صحيح مسلم 4/167 ، سنن الدرامي 2/157 ، سنن الترمذي 3/456 . السنن الكبرى للبيهقي 7/454 ، سنن ابن ماجة 1/635 ، سنن النسائي 6/100 ، الموطأ 2/117) .

2876. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.
Book :17


மேல் உள்ள ஹதீஸின் அரபி பிரயோகத்தை பாருங்கள்.

குரானில் அருளப்பட்டு இருந்த (فيما أنزل) ஆயத்து  ஒன்று தான் "10 முறை தாய் பால் அருந்தினால் தான் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்று"

பிறகு அது ஐந்து முறை என்று மாற்றப்பட்டது.

فتوفي رسول الله நபி (ஸல்) மவ்த்தாக்கப்பட்டார்கள்.

وهن فيما يقرأ من القرآن - அந்த ஆயத்து குரானில் ஓதப்பட்ட ஆயத்தாக இருந்த நிலையில்.

விமர்சனம் 1: இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள் என்று இந்த ஹதீஸ் சொல்கிறது, அப்படி என்றால் குர்ஆனில் இப்போது இல்லையே? அந்த ஆயத்து எங்கே?

விளக்கம்:


இந்த ஹதீஸ் நபி (ஸல்) மரணத்திற்கு பிறகு ஒரு ஆயத்து தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம் தருகிறது என்ற விளக்கத்தை எங்கிருந்து முதலில் அறிந்தீர்கள். நாத்திகரிடம்(பிஜே) இருந்தா?

"மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்றால் பலர் எப்படி ஓதினார்கள். பலர் ஓதவில்லை என்று தானே அர்த்தம்?

இங்கே ஆயிஷா (ரலி) நபி (ஸல்) அவர்களில் மரணத்தை பற்றி குறிப்பிட காரணம் என்ன?

உங்கள் அறிஞர் பிஜே தொலைந்து விட்டது என்பது தான் அர்த்தம் என்று சொல்கிறார், மற்ற அறிஞர்கள் ஐந்து முறை பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உருவாகும் என்பதற்கு இந்த ஹதீஸ் தான் ஆதாரம் என்கிறார்கள். அது எப்படி?

ஐந்து முறை பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு உருவாகும் என்ற ஆயத்து எங்கே என்ற கேழ்விக்கு, இந்த ஹதீஸ் தான் விளக்கம். அதுவும் குரானில் இருந்து மாற்றப்பட்டது விட்டது. மாற்றப்பட்டது பலருக்கு தெரியும், மக்களில் சிலர் அதை ஓதி வந்தார்கள்.

விமர்சனம் 2: ஐந்து முறை என்பது எப்போது மாற்றப்பட்டது?

விளக்கம்:


நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் மாற்றப்பட்டுள்ளது. "மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்"

இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க பின்னணி என்ன? எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக தெரிகிறது. ஒரு வேலை அந்த ஆயத்து குரானில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) எப்படி கூறி இருப்பார்கள்?.

எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில்,குர்ஆனில் உள்ள இந்த ஆயத்து என்று தானே கூறி இருப்பார்கள்.

அவ்வாறு கூறாமல் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டு வந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்" என்று கூறுவதிலிருந்து " குறிப்பிட்ட ஐந்து தடவைகள்" என்ற வசனம் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் நீக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது.

குறுக்கு கேள்வி: இந்த விளக்கத்தை சொல்லும் நீங்களும் பிற அறிஞர்களின் கருத்தை தானே தக்லீத் செய்கிறீர்கள்

விளக்கம்:


இது என்னுடய தனிப்பட்ட ஆய்வு மற்றும் விளக்கம். அது எப்படி பிறர் சொல்வதை கேட்டால் மட்டும் தக்லீத். பிஜே சொல்வதை சொன்னால் மட்டும் தக்கலீத் இல்லை??.

எனக்கு தெரிந்து என்னுடைய இந்த கேள்விகளை வேறு எந்த அறிஞரும் கேட்டதாக நான் அறிய வில்லை, அப்படி ஏதும் நீங்கள் அறிந்தால் அந்த வீடியோ தாருங்கள். மற்ற அறிஞர்களின் கருத்திற்கு ஒத்த கேள்வியை நான் கேட்டுள்ளேன் என்று அல்லாஹ்விற்கு நன்றி கூறுவேன்.

1. "மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்றால் பலர் எப்படி ஓதினார்கள். பலர் ஓதவில்லை என்று தானே அர்த்தம்?

2. இந்த ஹதீஸை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்க பின்னணி என்ன? எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் சொல்வதாக தெரிகிறது. ஒரு வேலை அந்த ஆயத்து குரானில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால் ஆயிஷா (ரலி) எப்படி கூறி இருப்பார்கள்?. எத்தனை முறை தாய் பால் அருந்தினால் தாய் பிள்ளை உறவு ஏற்படும் என்ற கேள்விக்கு பதில் இந்த ஆயத்து என்று தானே கூறி இருப்பார்கள். அவ்வாறு கூறாமல் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது.
பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்" என்று கூறுவதிலிருந்து " குறிப்பிட்ட ஐந்து தடவைகள்" என்ற வசனம் நபி (ஸல்) அவர்களின் இறுதி காலத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இடைக் கேள்வி: இந்த ஹதீஸ், ஒரு ஆயத்து தொலைந்த விட்டது என்று நாங்கள் சொன்னால், ஏன் எங்களை பிஜே வை தக்லீத் செய்கிறோம் என்று கூறுகிறீர்கள்.

விளக்கம்:


அரபி வாசகத்தின் நேரடி பொருள் என்ன. பின்னணி காரணம் என்ன என்று மேலே பார்த்தோம். உங்களுக்கு சுயமாக அரபியை படித்து பொருள் புரிய தெரியுமென்றால் இதை நீங்களே எனக்கு முன்னாள் அறிந்த்திருப்பீர்கள். அவ்வாறு உங்களுக்கு அரபியை படித்து பொருள் புரிய முடியாதென்றால் என்ன செய்வீர்கள்? இந்த விளக்கத்தை எடுத்து கொண்டு போய் உங்கள் அறிஞர்களிடம் மட்டும் கேட்பீர்கள். இதை தான் நான் தக்லீத் என்றேன்.

எப்போது ஒருவர் ஸஹீஹான ஹதீஸிற்கு மாற்றமாக சொல்ல ஆரம்பித்தாரே அப்பவே நாம் பிற அறிஞர்களிடமும் கேட்டு அறிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இவர் இந்நாள் வரை நல்லது தானே சொன்னார், எவ்வளவு சோதனைகளை சந்தித்துள்ளார், இவர் சொல்கின்ற விளக்கம் தான் நமது சுய புத்திக்கு சரியாக தெரிகின்றது என்று எண்ணினால் நம்மை இது தக்லீதலும் ஒரு புதிய மதுஹபிலும் தான் கொண்டு சேர்க்கும்.


விமர்சனம் 3: குரானிலிருந்து பிறகு நீக்க பட்டாள்..? அந்த வசனத்தை ஜைத் பின் தாபித் அவர்கள் குரானை தொகுக்கும் பொழுது நீக்கினார்களா அல்லது உஸ்மான் (ரலி)) குரானை தொகுக்கும் பொழுது ஆயிஷா மீது உள்ள கோபத்தில் நீக்கிவிட்டார்களா .....? யாருடைய ஆட்சியில் அல்லது யார் குரானை தொகுக்கும் பொழுது நீக்கினார்கள்.
(உண்மையிலேயே இந்த கேள்வியை என்னிடம் ஒரு tntj சகோதரர் கேட்டார்).

விளக்கம்:


வசனத்தை நீக்கியது அல்லாஹ், அது பலருக்கு தெரியும் சிலருக்கு தெரியாது. எந்த எந்த பிரதியில் இருந்தது எந்த பிரதியில் இல்லை என்ற வரலாறு நம்மிடம் இல்லை. நீங்கள் அப்படி ஏதாவது ஒரு ஆயத்திற்காவது ஒரு வரலாறை கொண்டு வாருங்கள், பிறகு இந்த கேள்வியை கேளுங்கள்.

இடைக் கேள்வி: தக்லீத் விளக்கம் வேண்டும்?

தக்லீத் என்றால் இஸ்லாத்தின் மூலாதாரத்தை சுயமாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர முடியாமல், ஒரு அறிஞர் சொல்வது சரியாக இருக்கும் என்ற நன்னம்பிக்கையில் அவர் சொல்வதை இஸ்லாம் என்று நம்பி பின்பற்றுவது.

விமர்சனம் 4: திருமணம் செய்த பிறகு விபச்சாரம் செய்தவன்) கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும் என்ற வசனமும் (தாய் மகன் என்ற உறவை ஏற்படுத்துவதற்கு) பருவ வயதை அடைந்தவருக்கு பத்து முறை பால் புகட்ட வேண்டும் என்ற வசனமும் இறக்கப்பட்டது. எனது வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியில் ஒரு தாளில் அவை (எழுதப்பட்டு) இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவர்களுடைய விஷயத்தில் கவனம் செலுத்தினோம். எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : அஹ்மத் (20112)

விளக்கம்:


எங்களுடைய வீட்டுப் பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத் (20112)

என்ற முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பு பலமான இரண்டு அறிவிப்பாளர்கள் (யஹ்யா பின் சயீத் அன்சாரி மற்றும் மாலிக் இப்னு அனஸ்) அறிவிக்கும் முவத்தா, முஸ்லிமின் அறிவிப்பிற்கு முரண்படுகிறது. இது லயீப் என்று ஹதீஸ் துறை அறிஞர்கள் பிஜே பிறப்பதற்கு முன்னாலேயே சொல்லிவிட்டார்கள்.

அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த முஹம்மது பின் இஸ்ஹாக்கின் அறிவிப்பை சுன்னத்தான விஷத்தை நிறுவுவதற்கு ஆதாரமாக எடுக்கமாட்டார்கள்.

ஒரு வேலை நீங்கள் நினைப்பது போல் இந்த ஹதீஸை ஆதாரமானதாக எடுத்தாலும், இந்த ஹதீஸில் "பிராணி ஒன்று (வீட்டிற்குள்) நுழைந்து அந்தத் தாளைச் சாப்பிட்டுவிட்டது" என்று தான் உள்ளது. அது தின்றதால் அந்த ஆயத்தே குரானில் இல்லாமல் போனது என்று சொல்ல வில்லை. சொல்ல போனால் இந்த ஹதீஸை நீங்கள் நினைப்பது போல் ஆதாரமானதாக எடுத்தால் எந்த பிரதியில் இருந்தது என்ற உங்களுடைய கேள்விக்கு இது ஒரு பதில்.


விமர்சனம் 5: ஆயிஷா ரலி அறிவிப்பில் மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு அறிவிப்பு வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்மும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2869).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் (2869)

விளக்கம்:


ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ மட்டும் பால் உறிஞ்சிக் குடிப்பதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்படாது என்று உள்ளது, அப்படி என்றால் எத்தனை முறை குடிப்பதால் மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவு ஏற்படும்? ஐந்து முறை தானே. இதெப்படி முரணாகும். முரண் ஹதீஸில் இல்லை அதை விளக்கியவர்களிடமும் அதை அப்படியே நம்பியவர்களிடமும் தான் உள்ளது. இதில் முரண்பாடு இல்லை


விமர்சனம் 6: ஏழு தடவைக்கு குறைவாக பால் புகட்டினால் பால்குடி உறவு ஏற்படாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

நூல் : முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் பாகம் : 7 பக்கம் : 466

தொளிவு படுத்துங்கள்

விளக்கம்:


நீங்கள் சொன்ன ஃபத்ஹுல் பாரீயில் அதே பக்கத்தில் முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் மாற்றாரு ஸஹீஹான அறிவிப்பில் இப்படி சொல்கிறது என்று சொல்கிறார்கள்

وعند عبد الرزاق بإسناد صحيح عنها قالت : لا يحرم دون خمس رضعات معلومات

ஐந்து முறை பால் குடித்தாலே தீவிர மஹ்ரம் உறவு ஏற்படாது

முஸன்னஃப் அப்திர்ரஸ்ஸாக் மாற்றாரு அறிவிப்பில்

رقم الحديث: 13524
(حديث موقوف) عَنْ عَنْ مَعْمَرٍ ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عُقْبَةَ ، قَالَ : أَتَيْتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَسَأَلْتُهُ عَنْ صَبِيٍّ شَرِبَ قَلِيلا مِنْ لَبَنِ امْرَأَةٍ ؟ فَقَالَ لِي عُرْوَةُ : كَانَتْ عَائِشَةُ ، تَقُولُ : " لا يُحَرِّمُ دُونَ سَبْعِ رَضَعَاتٍ ، أَوْ خَمْسٍ " ، قَالَ : فَأَتَيْتُ ابْنَ الْمُسَيِّبِ ، فَسَأَلْتُهُ ، قَالَ : لا أَقُولُ قَوْلَ عَائِشَةَ ، وَلا أَقُولُ قَوْلَ ابْنِ عَبَّاسٍ وَلَكِنْ لَوْ دَخَلَتْ بَطْنَهُ قَطْرَةٌ بَعْدَ أَنْ يَعْلَمَ أَنَّهَا دَخَلَتْ بَطْنَهُ حَرُمَ .

"ஆயிஷா (ரலி) அவர்கள் ஐந்து முறை என்றோ ஏழு முறை என்றோ சொன்னார்கள்" என்று உள்ளது. அதாவது அறிவிப்பாளருக்கு சரியாக தெரியவில்லை. எனவே மற்ற பலமான அறிவிப்பின்படி, ஐந்து என்பது தான் சரியான எண்ணிக்கை.

விமர்சனம் 7: ஆயிஷா ரலி அறிவிப்பில் மூன்று ஐந்து ஏழு பத்து என்று நான்கு அறிவிப்பு வருகிறது.

மூன்று ஐந்து ஏழு பத்து, என்று எங்கே உள்ளது? இந்த கேள்வியே அடிப்படை நியாயமற்ற கேள்வி.

பத்து தடவை என்று முதலில் ஆயத் இறங்கியது, பிறகு ஐந்தாக மாற்றப்பட்டது. ஏழு என்பது அறிவிப்பாளரின் பலகீனமான அறிவிப்பு. மூன்று எங்கே இருந்து வந்தது? TNTJ அறிஞர்களின் பலகீனமான ஆய்வில் வந்தது என்று நான் நினைக்கிறன்.

விமர்சனம் 8:  இன்னும் இமாம் இப்னு ஹஜரின் கூற்று :

فتح الباري – ابن حجر ள جزء 9 – صفحة 147 ன

وأيضا فقول عائشة عشر رضعات معلومات ثم نسخن بخمس معلومات فمات النبي صلى الله عليه وسلم وهن مما يقرأ لا ينتهض للاحتجاج على الأصح من قولي الاصوليين لأن القرآن لا يثبت الا بالتواتر والراوي روى هذا على أنه قرآن لا خبر فلم يثبت كونه قرآنا ولا ذكر الراوي أنه خبر ليقبل قوله فيه والله أعلم

இப்னு ஹஜர் அவர்கள் எத்தனை முறை பால் புகட்ட வேண்டும் என்பது சம்பந்தமாக ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து பல முரண்பட்ட தகவல்கள் வருவதாகக் கூறிவிட்டு பின்வருமாறு கூறுகிறார். குறிப்பிட்ட பத்து தடவை பாலருந்தினால் பால்குடி உறவு ஏற்படும் என்ற சட்டம் குறிப்பிட்ட ஐந்து தடவையாக மாற்றப்பட்டது. இந்த வசனங்கள் குர்ஆனில் ஓதப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அறிஞர்களின் சரியான கூற்றுப்படி ஆதாரத்திற்கு தகுதியாகாது.

ஏனென்றால் அதிகமானவர்களின் வழியாகத் தான் குர்ஆன் நிரூபணமாகும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது. அறிவிப்பாளரின் கூற்று ஏற்றுக் கொள்ளப்படும் விதத்தில் அவர் இதை ஹதீஸ் என்றும் சொல்லவில்லை.

நூல் : ஃபத்ஹுல் பாரீ பாகம் : 9 பக்கம் : 147

விளக்கம்:


இதற்கு சரியான தமிழ் மொழிபெயர்ப்பை அரபி கற்ற ஆலிம்களிடம் கேட்டு பாருங்கள். எனக்கு தெரிந்த மொழிபெயர்ப்பு

மேலும், ஆயிஷா (ரலி) அறிவிப்பான் "குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால்தான் பால்குடி உறவு உண்டாகும்" என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது, குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என மாற்றப்பட்டது. இவ்வசனம் மக்கள் சிலரால் ஓதப்பட்டுவந்த காலத்தில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்." என்பதை கொண்டு (குர்ஆனில் ஒரு ஆயத்தை நாம் இணைக்க முடியாது) குரான் முத்தவாதிரான ஹதீஸை கொண்டு தான் நிறுவப்படும். இதை அறிவிப்பவர் இந்தக் கருத்தை ஹதீஸ் என்று சொல்லாமல் குர்ஆன் என்று சொல்கிறார். எனவே (அதிகமானோர் இவ்வாறு கூறாததால்) இது குர்ஆனாக ஆகாது.

எனவே யாரும் இந்த ஹதீஸை மறுக்கவில்லை. ஆக இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும் இதை ஹதீஸ் என்பதில் எந்த மறுப்பும் சொல்லவில்லை. குர்ஆனில் இருந்து மாற்றப்பட்டது என்பதையும் மறுக்கவில்லை.

No comments:

Post a Comment